May Lord Annapurni Chellapillayar shower His blessing to One and All.


www.kalyaanam.co.in OM Nama: Shivaaya, Shivaaya Nama: Om.

Link to Other Contents:

நமக்கு தேவை

1, ஏழ்மையில் நேர்மை  2. ,தோல்வியில் விடா முயற்சி  3 ,துன்பத்தில் துணிவு

4, செல்வத்தில் தியாகம்  5,பதவியில் பணிவு  6, கோபத்தில் பொறுமை

7, அன்பில் தூய்மை  8, அடக்கத்தில் எளிமை  9,உழைப்பில் விருப்பம்

10,பேச்சில் சிக்கனம்  11,கல்வியில் ஆர்வம்  12,கடமையில் பற்று

நாம்செய்ய வேண்டுவன

1,இறைவனை வணங்குக  2,இனிமையாகப் பேசுக  3,உண்மையே பேசுக

4,அன்பாகப் பேசுக  5,நல்லதையே பேசுக  6,மெதுவாகப் பேசுக

7,சிந்தித்துப் பேசுக  8,சபையறிந்து பேசுக  9,சமயமறிந்து பேசுக

10,பேசாதிருந்தும் பேசுக  11,சொல்வதையே செய்க  12,சோம்பலை அகற்றுக

நாம் கடைபிக்க வேண்டியவை

அன்பு காட்டு           ;ஆனால் அடிமையாகி விடாதே!

இரக்கங்காட்டு          ;ஆனால் ஏமாந்து போகாதே  !

பணிவாய் இரு      ;ஆனால் கோழையாய் இராதே!

சிக்கனமாய் இரு ; ஆனால் கஞ்சனாய் இராதே!

வீரனாய் இரு       ;ஆனால் போக்கிரியாய் இராதே!

மூன்று விஷயங்கள்

யாருக்காவது காத்திருப்பதில்லை             ;நேரம்,பிறப்பு,இறப்பு

சகோதர, சகோதரிகளை விரோதியாக்கும்      ;நகை,மனைவி,சொத்து

யாராலும் திருட முடியாதது                   ;கல்வி,அறிவு,விதி

நினைவில் வைத்திருப்பது அவசியம்    ;கடமை, கண்ணியம் கட்டுப்பாடு,

வெளிவந்து திரும்புவதில்லை                 ;அன்பு,சொல்,உயிர்

வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்     ;தாய், தந்தை,இளமை,

திரைமறைவில் இருப்பது அவசியம்            ;தர்மம்,காமம்,சத்தியம்

முதல் மரியாதை கொடு                       ;தாய்,தந்தை, குரு

அறிந்து கொள்ள வேண்டியது

நம்முஅமுடன் வருவது                       ---பாவம்,புண்ணியம்

நம்மால் பிரிக்க முடியாதது                    ---பந்தம்,பாசம்

அடக்க முடியாதது                            ---ஆசை,துக்கம்

அழிவை தருவது                              ---பொறாமை, கோபம்

தானாக வருவது                              ---இளமை,முதுமை

தவிர்க்க முடியாதது                ---பசி,பிணி

வந்தால் போகாதது                            ---புகழ்,பழி

வருவதும்,போவதும்                           ---இன்பம், துன்பம்

போனால் வராதது                             ---மானம்,உயிர்

எல்லோருக்கும் சமமானது                     ---பிறப்பு, இறப்பு

நமஸ்காரம் செய்யும் இடம்

கோவிலில் த்வஜஸ்தம்பம் இருந்தால் அதன் அருகே மட்டும் தான் நமஸ்கரிக்க வேண்டும், இல்லையெனில் கோயில் நுழைவாயில் அருகே

நமஸ்காரம் செய்யலாம் ஒவ்வொரு சுவாமிக்காகவும்    ஆங்காங்கே நமஸ்கரிக்கக் கூடாது தெற்கு நோக்கியும் நமஸ்கரிக்கக் கூடாது கோவிலில் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத பல தேவர்கள், தேவதைகள்

சுற்றி உள்ளனர்,எனவே நுழைவாயிலின் அருகே தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்

சிவபூஜையும், சிவதீக்ஷாவும் எல்லா ஜாதியினருக்கும்

          விப்ர க்ஷத்ரிய விட்சூத்ரா தீக்ஷிதாச்ச ப்ரவேசகா;

          ஆத்மார்த்த யஜனம் குர்யாத் நகுர்யாத் பரார்த்தகம்

                என்கிற "மகுடாகம" ஸ்லோகம்,

ஆறு சமயங்கள்

சைவம்      -      சிவன்

காணாபத்யம்-      கணபதி

கெளமாரம்   -      குமரன்

சாக்தம்       -      சக்தி

வைணவம்  -      விஷ்ணு

செளரம்       -     சூரியன்

ஒர் கற்உருவச் சிலைக்கு மூன்றுவித சக்திகளை செலுத்தி பிரதிஷ்டை செய்கின்றனர்  "பிராணசக்தி"

 

1,ஒளஷதம்      -புல் பூண்டு செடிகளின் சக்தி

2,பாசுகம்                -ஜீவப்ராணிகளின் சக்தி

3,லெளகிகம்             -உலோக சக்தி

கோவிலின் வரிசையான மண்டபங்கள் மனிதனின் உடல் அமைப்பைப்

போன்றதே

1,சபா மண்டபம்         -மூலாதாரம்       - நாபிக்குக் கீழே

2,அலங்கார மண்டபம்   -ஸ்வாதிட்டானம்   -அடிவயறு

3,ஸ்நபன் மண்டபம்     -மணிபூரகம்         -வயறு

4,மகா மண்டபம்         -அநாகதம்          -ஹ்ருதயம்

5,அர்த்த மண்டப்ம்       -விசுத்தி            -நெற்றிபொட்டு

6,கர்ப்பகிஹம்            -ஆக்ஞை           -தலைக்குமேல்  

கூடாது

ஆண்களுக்கு

புகை,மது போன்றவை கூடாது தெரியாத தொழிலைச் செய்யகூடாது

நாணயம் கெட்டவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது வரவுக்கு

மேல் செலவு செய்யகூடாது மொத்த வருமானத்தில் 5-ல் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்,2,சதவீதமாவது தர்ம காரியங்களுக்குச் செலவிட வேண்டும் பல வருடங்கள் நம்பிக்கையாய் இருந்தவரை திடீரென

சந்தேகிக்கக்கூடாது ஒருவரைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல்

புகழ்ந்து பேசிவிடக்கூடாது ஞாபகசக்தி, விரைவில் கிரகிக்கும் தன்மை

உயர்ந்த மனோபாவம்,சரள சுபாவம்,நேர்மை,மெய்மை,தைரியம்,நிதானம்

ஆகிய குணங்கள் உங்கள் தொழிலில் வெற்றியடைய இன்றியமையாதவை

அளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம்,சோம்பல்

எக்காரியத்தையும் தாமதமாகவே செய்யும் நடைமுறை இவைகள் உங்கள்

முன்னேற்றத் தடைகள்

பெண்களுக்கு

இரவில் விளக்கு வைத்தவுடன் அழுவதை தவிர்ப்பது நலம் காலை ஆட்டக்கூடாது, மல்லாந்து படுக்க வேண்டாம், விளக்கு வைத்தபின்

வளையல்களைக் கழற்றக்கூடாது திருமணம் ஆன பெண்கள் கைகளில்

வளையல் அணியாமல் உணவு பரிமாறக்கூடாதுசெவ்வாய்,  வெள்ளிக்கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பிவிட

வேண்டும்,அன்று பிறர் வீடுகளில் தங்குவதை தவிர்க்க வேண்டும்

காய்கறிகளையோ, அன்னத்தையோ கைகளால் பரிமாறக் கூடாது

தலையை விரித்துப் போட்டு உட்காரக்கூடாது தம்பதிகளைக் கூடவிடாமல்

தடுப்பது மகாபாவம்,திருமணம் ஆன பெண்கள் குங்குமம் பொட்டு கட்டாயம் அணிய வேண்டும், மெட்டி நெற்றி உச்சிப்பொட்டு மாங்கலய கயிறு இவைகள் திருமணமான பெண்கள் கண்டிப்பாக அணிய வேண்டும்

பஞ்ச சபைகள்

1,சிதம்பரம்                     - கனகசபை

2,திருவாங்காடு                 -ரத்தினசபை

3,மதுரை            -வெள்ளிசபை

4,திருநெல்வேலி                - தாமிரசபை

5,திருக்குற்றாலம்               - சித்திரசபை

காசிக்கு நிகரான தலங்கள்

1,திருவெண்காடு

2,திருமயிலாடுதுறை

3,திருவையாறு

4,திருவிடைமருதூர்

5,திருவாஞ்சியம்

16பேறுகள்;புகழ்,வலிமை,கல்வி,வெற்றி,நன்மக்கள், பொன்,நெல்,நல்லூழ்

நுகர்ச்சி, அறிவு,அழகு,பெருமை,இளமை,துணிவு,நோயின்மை,வாழ்நாள்

(யதார்த்தபோதம்), நற்பேறு

எண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்

1,உத்தராயண-தக்ஷிணாயன புண்ய காலங்களிலோ 
2,துலா விஷு முதலிய காலங்களிலோ 
3,செவ்வாய்க் கிழம 4,தேய்பிறையிலோ 
-----------------------------------------------------------
(-எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல்_)
பானுவாரம் சிஸ்ரவாரம் முடிய எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தலுக்கான பலன்கள் 
1) 
ஞாயிற்றுக் கிழமை எண்ணைத் தேய்த்து ஸ்நானம் செய்தால் இதயத்தில் எரிச்சலை உண்டு பண்ணும். 
2) 
திங்கட்கிழமை எண்ணை ஸ்நானம் தோலின் பொலிவையும்,சிகப்பு நிறத்தையும் 
அளிக்கும்.
3) 
செவ்வாய் கிழமை எண்ணை ஸ்நானம் அகால மரணத்தைத்தரும் 
4) 
புதன் கிழமை எண்ணை ஸ்நானம் செய்தால் பொருள் விருத்தியைத் தரும் 
5) 
வியாழக்கிழமை எண்ணை ஸ்நானம் ஏழ்மையையும்,பணக் குறைவையும் அளிக்கும். 
6) 
வெள்ளிக்கிழமை எண்ணை ஸ்நானம் பல விதங்களில் ஆபத்து விளைவிக்கும் 
7) சனிக்கிழமை எண்ணை ஸ்நானம் ஆயுள் விருத்தியையும் மனச் சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும்.
(<எண்ணைய் தேய்த்து ஸ்நானம் செய்ய ஏற்ற திதிகள்>) 
க) த்விதியை,திரிதியை,பஞ்சமி,சபதமி,தசமி,த்ரையோதசி ஆகிய தினங்கள் பலத்தையும்,பொருளையும் நீண்ட ஆயுளையும்,புத்திரர்களையும் அளிக்கும்
௨) தசமி திதியில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல் நலம்
௩) தசமி திதிகளில் எண்ணெய் தேய்க்காமல் ஸ்நானம் செய்தால் அது ஆயுள் 
புத்திர்க்கூர்மை,புகழ் இவற்றைக் குறைக்கும்
( -தவிர்க்க வேண்டிய திதிகள்_) 
பிரதமை, சதுர்த்தி, சஷ்டி,நவமி,சதுர்த்தசி,அமாவசை ஆகியவை வாழ்க்கையில் உள்ள சுகபோகங்களையும் புத்திசாலித்தனத்தையும்,சரீர பலத்தையும்,புகழையும்
குறைக்கும்,ஆகவே அவற்றைத் தவிர்த்தல் நலம்
குறிப்பு:} மேற்கூறிய தினங்கள் எண்ணெய் ஸ்நானம் செய்ய அவசியம் ஏற்பட்டால் கெட்ட பலனைக் குறைக்கு எண்ணெயுடன் நெய்யைச் சேர்த்துக் கலந்து குளித்தால் நல்லது 

தஞ்சாவூர்க் கல்வெட்டு கூறும் அதிசய சோதிடம்!


தஞ்சைப் பெரியகோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் சுவையான விவரம் இது:சோழ வமிசத்து அரசர் ஜவர்,நாயக்கர் அரசர் ஜவர்,நாயக்கர் அரசர் பதினெட்டுப்பேர்,மகாராஷ்டிர வமிச அரசர் எட்டுப்பேர்,ஆக31 பேர் ஆண்ட பிறகு கம்பெனியார் வர்க்கத்தில்158 பேர் இந்த நாட்டை ஆள்வார்கள்,பின்பு கலியுகாதி5045க்கு மேல் ஆங்கில ஆட்சி முடிவுறும்,அப்போது ஜரோப்பாக் கண்டம் ஜந்து பிரிவாகிச் சண்டை ஏற்படும்,இந்நாட்டில் சமரசக்கட்சி ஏற்பட்டு18ஆண்டுகள் நடைபெறும்,பிறகு சாதி மதப் பூசல்கள் ஏற்பட்டு யிர்ச்சேதமும்,பொருட்சேதமும் அதிகமாகிச் சமுகம் மடியும்,பிறகு ஜப்பானின் உதய சூரியன் கொடியை நாட்டும்"இவ்வாறு அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது,இக்கல்வெட்டு எப்போது பொறிக்கப்பட்டது என்பது தெரியாது,இதில் கூறியுள்ளபடி சோழர்,
நாயக்கர்,மகாராஷ்டிரர்,ஆங்கிலேயர் ஆட்சி நடந்தது;பிறகு,காங்கிரஸ் ஆட்சி நடந்தது;அதன்பிறகு உதயசூரியன் சின்னம் கொண்டதிராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தது இவை யாவுமே கல்வெட்டிகல் கூறியுள்ள்படியே நடந்துள்ளன! இந்தத் தகவல் பெங்களூரிலிருந்து வெளிவரும்"அஸ்ட்ராலாஜிகல் மேகசின்"(மே1996)இதழில் பிரசுரமாகி உள்ளது!


அதிசயப் பதினொன்று!


இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவடைந்த நாளன்று"பதினொன்று" என்னும் எண் ஒர் அதிசயத்தை நிகழ்த்தியது!அந்த அதிசயம் இதுதான், இரண்டாவது உலகமகாயுத்தம் முடிவடைந்த 1944ஆம் வருடம்,11ஆவது
மாதத்தில் 11ஆம் நாளன்று,காலை 11,00மணியளவில் ஆகும்.


முதல் இரவு அறையின் இரகசியம்!


முதல் இரவு அறையில் மணமகன் கிழக்கு நோக்கி இருக்க,மணமகள் அவனுக்குப் பால் பழம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும்,அதே போல்,கணவர் கொடுக்கும் பாலை மணமகள் மேற்கு அல்லது தெற்கு முகமாய் அமர்ந்து அதனைப் பெறவேண்டும்,இப்படிச் செய்தால் தீர்க்க ஆயுளும், தம்பதியினரிடையே அன்பும் உண்டாகும்,

இது தெரியுமா?


வடதுருவத்தில் 30பாகையிலும்,தென் துருவத்தில்30பாகையிலும் உயிர் வாழ்கின்றவர்களுக்கு நட்சத்திர மண்டல ஆதிக்கம்,கிரகங்களின் ஆதிக்கம் சரிவாய் ஏற்படுவதால் அவைகளின் நேரடித் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆளாவது இல்லை,ஆகவே,அங்கெல்லாம் ஜோதிட சாஸ்திரம் தக்க பலன் அளிப்பது இல்லை, இதன் காரணமாகத்தான் பூமத்தியரேகையை ஒட்டிய வட-தென்கோளப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளாகிய கிழக்கிந்தியத் தீவுகள்,ஆஸ்திரேலியா,பர்மா,இலங்கை,இந்தியா, வடஅமெரிக்காவின் ன்பகுதி,தென்அமெரிக்காவின் வடபகுதி, ஆப்பரிக்காவின் மையப்பகுதி போன்ற நாடுகளில் எல்லாம் ஜோதிடக் கலை பரவலாகப் பயன் தருகின்றது அங்கு ஜோதிடக்கலை சிறப்புற்று விளங்குகிறது ஆனால் மேலே சொன்ன எல்லைக்கு உட்படாத நாடுகளான வடஆசியா,ஜரோப்பா போன்ற கண்டங்களில் ஜோதிட சாஸ்திரங்கள் சரியான பலனளிப்பத்தில்லை!எனவே அங்கெல்லாம் ஜோதிடக்கலை சிறப்புப் பெறவில்லை!

தீர்த்தங்கள் :


1, பிரம்ம தீர்த்தம் 2, சூல தீர்த்தம் 3, ஆனந்த தீர்த்தம் 4, காளி தீர்த்தம் 5. வைணவ தீர்த்தம் 6, இராகு தீர்த்தம் 7. ஆழி தீர்த்தம் 8, சங்க தீர்த்தம் 9. சுக்கிர தீர்த்தம் 10. பராசர தீர்த்தம்11. அகத்திய தீர்த்தம் 12. கௌதமதீர்த்தம் 13. (அக்னி) வண்ண தீர்த்தம் 14. குமார தீர்த்தம் 15. சூரிய தீர்த்தம் 16. சந்திர தீர்த்தம் 17. சேது தீர்த்தம் 18. அகண்ட தீர்த்தம் 19. பதினெண்புராண தீர்த்தம் 20. புறவ நதி தீர்த்தம் 21. கழுமலநதி தீர்த்தம் 22. விநாயகநதி தீர்த்தம்

தலைமுடி, நகம், முகம் மழித்தல் (ஷேவிங் ஆகியவற்றைச் செய்யக்கூடாத தினங்கள்):

ஒருவர் தலைமுடி வெட்டக் கூடாத மாதங்கள் மாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் ஆகும். கிழமைகள் செவ்வாய், வெள்ளி ஆகும்; நட்சத்திரங்கள் பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி மற்றும் அவரவர் இராசிக்கான சூன்யதிதிகள். ஆனால்,இறைவனுக்குக் காணிக்கை, பிரார்த்தனை செலுத்த எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை!

விருந்துக்கு ஏற்ற நாள்!

முதலில் மாமனார் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும்,அவர்கள் நம் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும் அதற்கு ஏற்ற நாள்கள் வளர்பிறையில் திங்கள்,புதன்,வெள்ளி,சனி ஆகிய நாள்களே ஆகும் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு,ஆகிய நாள்களில் எக்காரணத்தைக் கொண்டும் விருந்து உண்ணக்கூடாது,மேலும்,தேய்பிறையில் எந்த நாளிலும் முதலில் சாப்பிடக்கூடாது,இதே விதிமுறையைத் தான் நாம் அளிக்கும் விருந்திலும் கடைப்பிடிக்க வேண்டும்!

விஷ்ணு அவதாரமும் நவக்கிரகங்களும்!

விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் அம்சமாய் விளங்குகிறது.
1. கேது-மத்ஸ்யம் 2. சனீஸ்வரர்-கூர்மம் 3. இராகு-வராகம் 4. செவ்வாய்-நரசிம்மர் 5. குரு-வாமணர் 6. சுக்கிரன்-பரசுராமர் 7. சூரியன்-இராமர் 8. குளிகன்-பலராமர் 9. சந்திரன்-கிருஷ்ணர் 10. கல்கி-புதன்

சனி நீராடுவதின் இரகசியம்!

சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தால், சனிக்கிரகத்திற்கும் நமக்கும் உள்ள நீண்ட தொடர்பு சில மணி நேரம் நல்லெண்ணெய் உடலில் இருக்கும் வரையில் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் காரணமாகச் சனிகிரகத்திலிருந்து வெளிப்படுகின்ற"மாரீஷ்" என்னும் விஷத்தன்மை வாய்ந்த ஒளிக்கதிர் நமது உடலைத் தொடர்ந்து பாதிக்காமல், இடையில் சிலகாலம் இடைவெளியை ஏற்படுத்துகிறது, இம்மாதிரி உண்டாகும் இடைவெளியினால் மனித உடலுக்குச் சனியினால் உண்டாகக்கூடிய இயக்கம் சமன்படுத்தப்படுகிறது, அதனால் சனிக்குச் சாந்தி ஏற்படுகிறது! இது விஞ்ஞான அடிப்படையில் அமைந்த ஒரு சனீஸ்வர சாந்தியாகும்!

வெள்ளிக்கிழமையின் இரகசியங்கள்!

வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கினால் அது நல்ல அதிர்ஷ்ட்த்தைக் கொடுக்கும்,வெள்ளிக்கிழமை அரிசி வாங்குவதும் நல்லது
வெள்ளிக்கிழமைச் சமையலில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் அது மிகவும் அதிர்ஷ்டம் ஆகும்,நெல்லிக்காயைப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் உண்ணக்கூடாது; வெள்ளிக்கிழமைகளில் அரிசி புடைக்கக்கூடாது,அரிசியை வறுக்கக்கூடாது.

சாஸ்திரம் கூறும் இரகசியங்கள்!

ஒருவருக்கு இலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கக் குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்
1. சூரியன் உதித்த பிறகும் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது, 2. பால், தயிர், பச்சைக்கறிகாய்கள், சுண்ணாம்பு, உப்பு, தவிடு, நெருப்பு, தண்ணீர் ஆகியவற்றை இரவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது 3. பாலைப்பொங்கிவழியவிடக்கூடாது 4. இரவில் குப்பை கூளங்களை வீட்டிற்கு வெளியே கொட்டக்கூடாது, 5. மாலையில் விளக்கு ஏற்றிய உடனே வெளியில் செல்லக்கூடாது, வம்பு பேசக்கூடாது, 6. விளக்கு ஏற்றிய பிறகு தலைவாரிக்கொள்ளுதல்,முகம்கழுவுதல், தயிர் சிலுப்புதல், கறிகாய் நறுக்குதல், அரிசி களைதல், கூட்டுதல் முதலியவற்றைச் செய்யக்கூடாது.

எப்போது கோயில் மணியை அடிக்கக் கூடாது?

கோயிலிலிருந்து வெளியே வரும்போது மணியடிக்கக்கூடாது, கோயிலுக்குப் போன பலனே போய்விடும், இறைவனை வணங்கும்போது மட்டுந்தான் மணி அடிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன்.

பூவைப்பற்றி அறிய வேண்டியவை!

குழந்தைக்கு ஓரு வயதாகும் வரையில் தலையில் பூ வைக்கக்கூடாது, அதே
போல் ஒரு பெண் வைத்துக் கொண்ட பூவை இன்னொரு வைத்துக்கொள்ளக்கூடாது!

பல் கூறும் இரகசியம்!

ஒருவருக்கு முன்பற்களிடையே இடைவெளி இருந்தால் அவர்கள் நிச்சயமாய்ப் பணக்காரர்கள் ஆவார்கள் குழந்தை பிறக்கும்போது பல்லுடன்
பிறப்பது அவ்வளவு நல்லதல்ல; பரிகாரம் செய்க,

அசுவமேதயாகப் பலனப் பெறக்கூடியவர்கள் யார்?

கஜபூஜை,கோபூஜை,சுமங்கலிபூஜை,கலசபூஜை செய்பவரும்,படிப்புக்கு உதவி செய்பவரும் ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுபவனும் அநாதைப்பிரேதத்தை எவர் உதவியும் இன்றித் தாமே செலவு செய்து அடக்கம் செய்பவரும், அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்!

முடி உணர்த்தும் முன் சகுனம்!

சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது கவலையை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும், அதற்குப் பரிகாரமாய் ஓரு நெல் சாப்பிட்டுவிட்டால் எந்தக் கவலையும் ஏற்படாது அப்படி ஏற்பட்டாலும் சிக்கல் இராது.

எவ்வாறு சாப்பிடக்கூடாது?

ஈரத்துணியுடனும்,துண்டுடனும் சாப்பிடக்கூடாது, தெருக்கதவைச் சாத்தாமலும்,சந்திரனின் நிழலிலும்,கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும் நடுநிசியிலும்,பிரதோஷகாலத்திலும்,இருட்டிலும்,திறந்தமாடியிலும், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்! ஆனால்,பௌர்ணமியன்று நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடாமல் பலருடன் கூடிச்சாப்பிடலாம்!

நோய் நொடி இன்றி வாழ!

குழந்தை பூமியில் ஜனனமானவுடன் நெய்,தேன் ஆகியவற்றில் தங்கத்தைத் தேய்த்து அக்குழந்தையின் நாவில் குலதெய்வத்தின் பெயரை வேண்டிக்கொண்டே மூன்று முறை தடவ வேண்டும்,அதன்பின்பே தொப்பூழ் கொடியை அறுக்கவேண்டும்,இவ்வாறு செய்தால் அக்குழந்தை நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் இருக்கும்,

ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்!

ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது, மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்!

வலதுப் பக்கமாய்ச் செல்ல வேண்டும்!

நடந்து செல்லும்பொழுது,பசு,தெய்வசப்பரம்,நெய்க்குடம்,அரசமரம், வில்வமரம்,நெல்லிமரம்,அரசுடன் சேர்ந்த வேம்பு ஆகியவை குறுக்கிட்டால் வலப்பக்கமாய்ச் சுற்றிப் பிரதட்சணமாய்ப் போக வேண்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன சுபத்தடை ஏற்படும்!
நல்ல காரியங்களைப் பற்றி பேசும்போதும்,சுபகாரியத்தை முடிப்பதுபற்றிய பேச்சில் ஈடுபட்டிருக்கும் போதும் எள் அல்லது எண்ணெயைப் பற்றிப் பேசுதல் கூடாது அதனால் சுபத்தடை ஏற்படும்!

கூடாத சில விஷயங்கள்!

நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய
இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது3,நிலையில் அமரக்கூடாது4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது 13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை,கோவிலுக்குப் போக்ககூடாது?

எந்நாளில் முடி வெட்டக்கூடாது?

சதுர்த்தி,சதுர்த்தசி,சஷ்டி,பௌர்ணமி,நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை,

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

வீட்டின் நிலைப்படி தேவிக்கு ஒப்பாவாள்,அதனால் ஆண்கள் உள்ளாடையின்றி நிலைப்படியைத் தாண்டுதல் கூடாது சாஸ்திரங்கள் கூறுகின்றன, 

சாப்பிடக் கூடாத நேரங்கள்!

எக்காளம்,பேரிகை,சங்கு,இயந்திரம்,வண்டி,உரல்,உலக்கை,செக்கு,யானை சண்டை ஆகியவற்றின் சத்தம் கேட்கும்போது சாப்பிட உட்காரலாகாது!மேலும் சாப்பிடும்பொழுது விளக்கு அணைந்துவிட்டால்,சூரியபகவானைத் தியானம் செய்து மீண்டும் விளக்கு ஏற்றிவிட்டுச் சாப்பிட வேண்டும், இருட்டில் அமிர்தமே ஆனாலும் ஒரு பொழுதும் சாப்பிடக்கூடாது, அந்தி, சந்தி வேளைகளிலும்,விளக்கு வைத்தவுடனும் சாப்பிடக்கூடாது,

ஹோமத்தின் முக்கியக் கடமை!

ஒரு வீட்டில் ஹோமம் செய்த பின்பு அருகு,பழம்,சந்தனம்,புஷ்பம், ஜலகும்பம்,தயிர்,கன்றுடன் கூடிய பசு,எருது,பொன்,அட்சதை,தேன், கன்னிப்பெண்,சுமங்கலி,மஞ்சள்,ஆகிய மங்களத்திரவியங்களைத் தரிசனம் செய்தபிறகே வெளியில் செல்லவேண்டும்!

குழந்தைக்குத் தரிசனம் செய்விக்கும் நாள்!

குழந்தை பிறந்த நாலாவது மாதத்தில்,ஒரு நல்லதினத்தில் அக்குழந்தைக்குச் சூரியதரிசனம்,சந்திரதரிசனம்,பசுதரிசனம்,ஆலயதரிசனம்
செய்விக்க வேண்டும்,செவ்வாய்,சனி ஆகியவற்ரைத் தவிர மற்ற கிழமைகளில் பௌர்ணமி வரும் சமயம் இவற்றைச் செய்வது நல்லது

தோஷம் தரும் விஷயங்கள்!

கன்று ஈன்று பத்து நாள் ஆகாத பசுமாட்டின் பால்,தேத்தாகொட்டை, நெய்கசண்டு,கன்று இல்லாத பசுவின் பால் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அப்படி உட்கொள்வது தோஷமாகும்

பல் துலக்கும் முறை!

பல் துலக்கியவுடன் பற்குச்சியை அலம்பித் தென்மேற்கு மூலையில் அல்லது ஓடும் தண்ணீரில் விட வேண்டும் பல்துலக்குக் குச்சி கிடைக்காத சமயம் வாயைப் பத்துமுறை கொப்புளித்தால்,பல் துலக்கியதற்குச் சமமாகும்,கோவில்,தோட்டில்,யாகம் அல்லது ஹோமம் செய்யுமிடம்,ஜலம் ஆகிய இடங்களில் பல்துலக்கக் கூடாது!

கூடாத சில விஷயங்கள்!

பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது!அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும் மற்றும் அக்கினி,சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது, முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது,அது மிகப்பெரிய தோஷமாகும்!

கூடவே கூடாது!

நமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்:
1,குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும். 2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது. 3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது. 4. கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது. 5, சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது 6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது 7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது 8. இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும். 9. வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம்
துப்பக்கூடாது. 10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது. 11. தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது 12. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது 13. கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுகொள்ளுதல் தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. 15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

ஆயுளை வளர்க்கும் ஐந்து!

மாலைவெயில், ஓமப்புகை, இளம் மனைவி, அருவிநீர், இரவில்பால் அன்னம் சாப்பிடுதல் ஆகிய இந்த ஐந்தும் நமது ஆயுளை வளர்க்கும் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

பெண்கள் கவனத்திற்கு!

நமது சாஸ்திரம் பெண்களுக்குக் கூறும் சில முக்கியகுறிப்புகள் 1. கணவரோடு மனைவி இருக்கும் போது மல்லிகை, முல்லைப் பூக்களைத் தாம் சூட வேண்டும். கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற பூக்களைச் சூடக்கூடாது. பெண்கள் குளிக்கும் போது முகத்திற்கு அவசியம் மஞ்சள் பூச வேண்டும். 3. ஓவ்வொரு பெண்ணும் அவசியம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாய் கல் வாழை விசிறி போன்ற மூக்குத்தி அணிவது விசேஷ சக்தி வாய்ந்ததாகும். 4. ஒவ்வொரு பெண்ணும் காலில் பெருவிரலுக்கு அடுத்தவிரலில் வெள்ளியால் மெட்டி அணிய வேண்டும். 5. ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்கின் போது தலையில் பூ வைக்கக்கூடாது; சமையல் அறைக்குள் போகக்கூடாது; யாருக்கும் உணவு படைக்கவும் கூடாது. 6, திருமணம் ஆன பெண்கள் இரவு நேரத்தில் கருப்பு, இரத்த சிவப்பு, கடல் நீலம் ஆகிய நிறம் கொண்ட சேலைகளை உடுத்தக்கூடாது, வெளிறிய வண்ணம் கொண்ட சேலைகளையே உடுத்தவேண்டும். 7. திருமணம் ஆன பெண் ஓவ்வொரு நாளும் அதிகாலையில் குளித்துவிட்டுக் கணவன் தூங்கிக்கொண்டுரும் போதே, அவன் முகத்தருகில் முகத்தைக் கொண்டு சென்று இதோ பாருங்கள் என்று கூறி எழுப்பித் தன் முகத்தில் விழிக்கும்படி செய்ய வேண்டும்.

உப்பு போடுங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் விளக்கேற்றி, உப்புப் பாத்திரத்தை வைத்து அதன் அடியில் பழைய செப்புக்காசு ஓன்றை வைத்து, கடையிலிருந்து உப்பு வாங்கி வந்து அதில் கொட்டி வழிபட்டால் குடும்பத்தில் இலட்சுமி கடாட்சம் உண்டாகும், இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும்

விசேஷ தரிசனம்!
காலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்த்தால் அதைவிட்ச் சிறப்பு வேறு எதுவும் இல்லை!

வீட்டிற்கு யாகம்!

வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் நல்ல நாள் பார்த்துக் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, குபேரன் பூஜை செய்ய வேண்டும்,அப்போதுதான் அந்தக் குடும்பம் விருத்திபெரும்!சிலர் கிரக பிரவேசத்தன்று செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர், கணபதி ஹோமம் மட்டும் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது தவறு ஆகும். மேலே சொன்ன முறையிலே செய்ய வேண்டும். அதுவும், பிரம்ம முகூர்த்தமாகிய காலை 4 மணி முதல் சூரியன் உதயம் ஆவதற்குள் செய்வது சாலச்சிறந்தது ஆகும்!

வீட்டில் நெல்லிக்காய்!

ஒவ்வொரு வீட்டிலும் வருஷன் முழுவதும் நெல்லிக்காய் இருப்பது மிகச்சிறப்பாகும். அது ஊறுகாயாகவோ, வற்றலாகவோ இருந்தாலும் சரி, வீட்டில் நெல்லிக்காய் எப்போதும் இருந்தால் இலட்சுமி கடாட்சம் ஆகும்!

வெந்நீர்க்குளியல் கூடாது!

அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, பொங்கல், பிறப்பு இறப்புகளால் ஏற்படும் தீட்டுக் காலங்கள் ஆகியவற்றின் போது வெந்நீரில் குளிக்கக்கூடாது.

சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன! பவிஷ்ய புராணத்தின் இரகசியம்!

இந்தியநாட்டின் ‘நாஸ்டர்டாமஸின்‘ நூல் எதுவென்றால் அது ‘பவிஷ்யபுராணமே‘ஆகும் அது,நமது நாட்டின் எதிர்காலம் பற்றிய சோதிடத்தை முன்கூட்டியே எழுதப்பட்ட ஓர் அற்புத நூலாகும்,அந்த நூலில் கூறப்பட்டுள்ள சில செய்திகள்: கோ(பசு) மாமிசம் சாப்பிடும் மிலேச்சர்கள் (ஆங்கிலேயர்கள்) சாஸ்திரத்தில் கூறப்பட்ட உண்மைகளை மீறி மக்களை வேறுபாதையில் இழுத்துச் செல்வார்கள்; பாரதத்திற்கு வந்து ஆட்சி செய்வார்கள், அவர்களுக்கு ராணி ஒருவர் உண்டு அவரது பெயர் விக்டோரியாமகாராணி, எட்டுப்பேர் கொண்ட சபை அமைத்து ராஜ்ய பரிபாலனம் செய்வார்கள் (அங்கிலேயர்கள் எட்டுப்பேர்க் கொண்ட வைஸ்ராய் எக்ஸிகியூட்டிவ் கவுன்சில் அமைத்து ஆட்சி செய்த வரலாற்றை இது குறிக்கின்றது)‘மொகலாயர்கள் ஆட்சிபற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது, அக்பர், பாபர், உமாயூன் என்ற பெயர்கள் எப்படி வைக்கப்பட்டது என்பதைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது, நாடு சுதந்திரத்திற்குப் பின்னர் மக்கள் வரிப்பளுவால் மிகவும் கஷ்டப்படுவார்கள் ராஜ்ஜியத்தை ஆள்பவர்கள் நம்பிக்கை கொள்ள முடியாத மனிதர்களாய் திருடகளாய் மாறி ஆட்சியை அலங்கோலம் செய்வார்கள் என்றும் அதில் குறிக்கப்பட்டுள்ளது அடிக்கடி கலகம் நடக்கும் ஜனங்கள் செய்வது அறியாது கலங்கிக் கண்ணீர்விடுவார்கள் எல்லா அரசியல் கட்சிகள்மீதும் வெறுப்புத் தோன்றி எல்லாக்கட்சிகளும் மகாவிஷ்ணுவின் பெயர்கொண்ட தெற்கே உள்ள ஒருவர் வடக்கே போய் இராணுவ ஆட்சி நடத்துவார் சர்வாதிகாரி ஆவார் அவர் மிகவும் தர்மவானாய் நடந்து கொள்வார் அப்போது வெளிநாட்டார் படையெடுப்பு ஓன்றும் நடக்கும் என்றும் பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது அவசியம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய அற்புத நூல். ஏழு உலகத்தின் இரகசியம்!


கனவில் கிடைத்த உண்மைகள்! (to be continued...)

|| Saanthi, Saanthi, Saanthi: ||

This website is constructed & Managed by TRS Iyengar